தீராத ஒற்றை தலைவலியா? தீர்வுகள்..!

கபாலம் வெடிக்குமாப் போல கிடக்கு என்று தலையைப் பிடித்துக் கொண்டு வருபவர் கள் பலர் இருக்கிறார்கள். ஒற்றைத் தலைவலி என்றும் மைகிரேன் என்று தாங்களே பெயர்சொல்லி க் கொண்டு வருபவர்களும் இருக்கிறார் கள்.
இருந்தபோதும் இவர்கள் எல்லோ ருமே உண்மையில் ஒற்றைத் தலைவலிக்காரர் அல்ல.

சாதாரண தலைவலியானது

  • தடிமன், 
  • மூக்கடைப்பு, 
  • மனப்பதற்றம், 
  • காய்ச்சல் 

போன்ற பல்வேறு நோய்களின்போது ஒரு அறிகுறியாக வெளிப்படுவதுண்டு.


ஆனால் ஒற்றைத் தலைவலி என்பது அவை போன்ற வெறும் தலைவலியல்ல. மிகவும் தனித்துவமான ஒரு நோயாகும். அந் நோய் இல்லாத தருணங்களிலும் கூட அது பற்றிய எண்ணம் வந்தால் பதற வைக்கக் கூடிய கடுமையான நோயாகும்.

தான் செய்து கொண்டிருப்பது எவ்வளவு முக்கிய வேலையானாலும் அதைக் கை விட்டுவிட்டு ஒதுங்குமளவிற்குத் தீவிரமானதாகும்.

வேறுபடுத்தும் அறிகுறிகள்

இத்தலைவலியின் சில தனித்துவமான பண்புகள் ஏனைய தலை வலிகளிலிருந்து வேறுபடுத்த உதவுகின்றன.

தூங்கமுடியாதபடி துடிதுடிக்கவைக்கும் மிகக்கடுமையான தலைவலி இது. படுவேகமாகக் குத்துவதுபோலவும், கூடிக் குறைந்து கொண்டிருப்பதுபோவும் தோன்றலாம்.

தலையின் ஒரு பக்கத்தி ல் மட்டுமே இது தாக்கு ம். பெரும் பாலனவர்க ளுக்கு தொடர்ந்து அதே பக்கத்திலியே தாக்கும்.

கண்ணின் உட்புறமாக வோ தலையின் பின்புற மாகவோ அன்றி கழுத் துப் பகுதியிலோ தாக்க க் கூடும்.

ஆரம்பிக்கும்போது மந்தமாக ஆரம்பித்து ஒரு சில நிமிடங் களிலோ சில மணி நேரத்திலோ தாங்கமுடியாதளவிற்கு அதிகரிக்கும்.

சில நிமிடங்களில் தணியாது. பொதுவாக 6 மணிநேரம் முதல் இரண்டு நாட்கள் வரை கூட தொடரும்.

பார்வை தொடர்பான சில சடுதியான தாற்காலிக மாற்றங் கள் ஒற்றைத் தலைவலி வரப்போகிறது என்பதற்கு கட்டி யம் கூறுவதுபோல வருவதுண்டு.


பார்க்கும் போது வெற்றுப்புள்ளி அல்லது கருமையான புள்ளிகள்
மங்கிய பார்வை,  கண் வலி,  நட்சத்திரங்கள் மின்னுவதுபோல அல்லது கோடுகள் வளைந்து வளைந் து செல்வதுபோல
ஒரு குழாயினூடாக அல்லது சுரங்கத் தினூமாகப் பார்ப்பது போலிருத்தல்.


இவற்றதை; தவிர திடீரெனக் குளிராக உணர்தல், அடிக்கடி சிறு நீர் கழிக்க வேண்டுமென்ற உணர்வு, சோர்வு களைப்பு, பசி யின்மை, குமட்டல் வாந்தி, விறைப்புத்தன்மை, வியர் வை, ஒளிகளைப் பார்க்கக் கூச்சம், அல்லது ஒலிகளைப் பொறுக்க முடியாமை போன்ற அறிகுறிகளும் இருக்கக் கூடும்.


தலைவலி வருவதற்கு முன்னர் சிலருக்கு, கொட்டாவி விடுவது, சிந்தனைத் தெளிவின்மை, குமட்டல் பேசும்போது சரியான வார்த்தைகளை கண்டுபிடிப்பதில் சிரமம் போன்ற எச்சரிக்கை அறி குறிகள் தோன்றுவதுண்டு.


சிலருக்கு தலைவலி நின்ற பின்னரும் கூட, மனம் சோர்வாக இருத்த ல், சிந்தனை தெளிலாக இல்லாதிருத்தல், தூக்கக் கலக்கம போன்ற உணர்வு, கழுத்து வலி என அதன் பாதிப்பு ஓரிரு நாட்களுக்குத் தொடர்வதுண்டு.
யாருக்கு வரும்

பொதுவாக குழந்தைப் பருவத்திலும் முதுமையிலும் வருவது குறைவு. 10 முதல் 45 வயதிற்கு இடைப்பட்ட காலத்திலேயே முதன் முதலில் தோன்றுவதுண்டு.

பொதுவாக ஆண்களைவிடப் பெண்களுக்கே அதிகமாக வருவ துண்டு.
ஒற்றைத் தலைவலி உள்ள பெண்களுக்கு அவர்கள் கர்ப்பிணியாக இருக்கும் காலங் களில் குறைவாகவே வருவது அவதானி க்கப்பட்டுள்ளது.

ஒரு குடும்பத்தில் பலருக்கு வருவதும் உண்டு.

தூண்டும் காரணங்கள் எவை?

மூளைக்கலங்களின் வழமைக்குமாறான செயற்பாடுகளால்தான் ஒற்றைத் தலைவலி ஏற்படுகிற து என நம்பப்படுகிறது. அதனால் நரம்பு பாதையிலும் மற்றும் இரசாயன மாற்றங்களாலும் இரத்தக் குழாய்களும் தசைநார்க ளும் இறுக்கமடைவதே தலை வலியை ஏற்படுத்துகிறது.

இவ்வாறு நிகழ்வதை பல விடய ங்கள் தூண்டுகின்றன. ஒருவரு க்கு எந்தெந்த விடயங்கள் தலை வலயைத் தூண்டுகின்றன என்பதை கண்டறிந்து அவற்றைத் தவிர்ப்பதன் கூலம் தலைவலி ஏற்படுவதைத் தடுக்கலாம்.

மனஅழுத்தம், பதகளிப்பு நோய், மனஅமைதியைக் குலை க்கும் சம்பவங்கள்.
சிலவகை மணங்களும் வாசனை த் திரவியங்களும்,
உரத்த சத்தங்கள், பிரகாசமான ஒளி உதாரணமாக கடும் வெயி லில் அலைவது,
மதுபானம், புகைத்தல் போன்றவை
பெண்களின் மாதவிடாய் சுழற்சி யின்போது ஏற்படும் ஹோர் மோன் மாற்றங்கள், கருத்தடை மாத்திரைகள்.
வழமையான தூக்க வழக்கங்களில் மாற்றங்கள், தூக்கக் குறைபாடு,
காலம் தவறிய உணவு, கடுமை யான உடற்பயிற்சி

சில வகை உணவுகள்

* பதப்படுத்தப்பட்ட உணவுகள், ஊறு காய் போன்ற புளித்த உணவுகள், மோனோசோடியம் குளுட்டாமேட் (MSG) கொண்ட உணவுகள்
* பேக் பண்ணப்பட்ட உணவுகள், சாக் லேட், விதைகள், கொட்டை கள், வேர்க்கடலை வெண்ணெய்,
* Tyramine கலந்த சிவப்பு ஒயின், நாட்பட்ட சீஸ், மீன், கோழி, ஈரல், போன்றவை
* அவகாடோ, வாழை, ஓரென்ஞ், எலுமிச்சை போன்ற சிட்ரஸ் பழங்கள்
* வெண்காயம் சிலரில்

 சிகிச்சை

நீங்கள் ஓற்றைத் தலைவலி நோயாளியானால், அதைத் தூண்டும் காரணிகளை அனுபவத்தின் மூலம் கண்ட றிந்து அவற்றைத் தவிர்ப்ப தன் மூலம் நோய் தோன்று வதைத் தவிர்த்துக் கொள்ளலாம்.

தலைவலி வந்துவிட்டால் சப்தமற்ற அமைதியான இடத்தில் ஆறுதல் எடுங்கள். ஒளி குறைவான அல்லது இருண்ட அறை உசிதமானது.
முடியுமானால் சற்று நேரம் தூங்குங்கள்.

கடுமையான தலைவலியானால் டிஸ்பிரின் போன்ற கரை யக்கூடிய அஸ்பிரின் மாத்திரை களில் இரண்டைக்கரைத்துக் குடியுங்கள். சிலர் இபூபுருவன் 400 மிகி மாத்திரை ஒன்றை உட்கொள்வதுண்டு.

வாந்தியும் கலந்திருந்தால் டொம்பெரிடோன் 10மிகி மாத்தி ரைகளில் இரண்டு அல்லது புரொமெதசீன் 25மிகி மாத்திரை யில் ஒன்று விழுங்கலாம்.

மிக அடிக்கடி தலைவலி வருவதாயிருந்தால் அதைத் தடுப் பதற்கு சில மாதங்களுக்கு தினசரி தடுப்பு மாத்திரைகள் உண்ணநேரலாம். அது மருத்துவ ஆலோசனையுடன் அவர து வழிகாட்டலில் மட்டும் செய்ய வேண்டியதாகும்